கொல்கத்தாவில் மே 12 - 16 தேதி களில் நடைபெற்று முடிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 11-ஆவது அகில இந்திய மாநாட்டில் கேரள மாநிலம் கொச்சி யைச் சேர்ந்த நிஜில் (34) ஒரு பிரதிநிதி. இவர் நியூஸ்கிளிக் செய்தியாளரிடையே பேசும்போது, கேரளாவில் சிறந்ததோர் சமூகத்தைக் கட்டி எழுப்பிடும் பணியில் கேரள இளைஞர்கள் பழங்குடியினர், தலித்துகள், திருநங்கையர் முத லானவர்களுடனும் ஒரு வலுவான பிணைப்பி னை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாகத் தெரி வித்தார். ‘‘இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கேரள மாநிலக் குழுவில் திருநங்கையர் ஒருவர் இடம் பெற்றிருப்பது இதனை மெய்ப்பிக்கிறது. கேரளாவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்து டன் இணைந்து மாநிலத்தில் இளைஞர்களுக் கான வேலைவாய்ப்பு கண்காட்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம். கேரளாவில் வளர்ச்சிப் பணிகளுடன் இணைந்து, தத்து வார்த்தப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டிருப்ப தால் ஒவ்வொருநாளும் ஏராளமான இளை ஞர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை நோக்கி அணி அணியாக வந்துகொண்டிருக் கிறார்கள்’’ என்றும் அவர் கூறினார்.
கேரளப் பிரதிநிதிகள் நாட்டின் வளர்ச்சிக்கும் இளைஞர்களின் வளர்ச்சிக்கும் எவ்வாறு முன் னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருக் கிறோம் என்பதைக் கூறும் அதே சமயத்தில், ஜம்மு-காஷ்மீரிலிருந்து வந்துள்ள இளைஞர்கள் தங்கள் மாநிலத்தில் அரசின் அடக்குமுறை தங்கள் மீது ஏவியுள்ள அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். மாநிலத்தில் ராணுவ மும் போலீசும் இரவு நேரங்களில் வாலிபர் சங்கத் தோழர்களின் வீடுகளுக்குள் நுழைந்து, சோதனை செய்வதும், பல்வேறு வடிவங்களில் துன்புறுத்துவதும் நாளும் நடைபெறும் நட வடிக்கைகளாகும் என்று அவர்கள் தெரிவித் தார்கள். குறிப்பாக, நிலைமைகள் மிகவும் மோசமாக இருப்பதாக சால்ட் லேக் பகுதியி லிருந்து வந்துள்ள முகமது அப்பாஸ் என்னும் பிரதிநிதி தெரிவித்தார்.
பஞ்சாப்பைச் சேர்ந்த குல்பிந்தர் சிங் கூறுகையில், விவசாயிகள் போராட்டத்தின் போது தாங்கள் தில்லி எல்லையில் போராட்ட த்தை நடத்திக் கொண்டிருந்த சமயத்தில், தங்கள் குடும்பத்தாரை அண்டைவீட்டுக்காரர்கள் மிகவும் அன்புடன் கவனித்துக் கொண்டதைத் தெரிவித்தார். சமீபத்தில் நடைபெற்ற தேர்த லில் பஞ்சாபில் காலங்காலமாக இருந்து வந்த கட்சிகள் அனைத்தும் துடைத்தெறியப்பட்டு விட்டன என்றும், ஒரு புதிய சக்தி ஆட்சிக்கு வந்திருக்கிறது என்றும் கூறினார். இவர்களும் ஒழுங்காக ஆட்சிபுரியாவிட்டால் தூக்கி எறியப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். கடந்த பத்தாண்டுகளில் பஞ்சாபில் 339 வாலிபர் சங்கத் தோழர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட னர் என்றும், சீக்கிய மதவெறியர்களால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை ஒரு சீக்கியர் எதிர்ப்பு ஸ்தாபனம் என்பதுபோல் முன்னிறுத்தும் முயற்சி நடந்துகொண்டிருப்பதாகவும் தெரி வித்தார். விவசாய சங்கத்தின் போராட்டம் நடை பெற்ற சமயத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பங்கு ஒளிவீசக்கூடிய விதத்தில் அமைந் திருந்தது என்றும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.
தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த பிரியங்கா முருகேசன் (32), தோழர் அசோக் கொல்லப் பட்டு தியாகியான பின்னரும், நீட் தேர்வில் தோல்வியடைந்தவர் தற்கொலை செய்து கொண்ட பின்னரும், இவற்றுக்கெதிராக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாபெரும் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடந்ததை குறிப்பிட்டதுடன், சமீபத்தில் தமிழ்நாடு முழுதும் நடைபெற்ற மாபெரும் சைக்கிள் பேரணியையும் சுட்டிக் காட்டினார். மாநிலத்தின் பல்வேறு பிரச்சனை களுக்காக நடைபெற்றுவரும் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியிலேதான் நாங்கள் இந்த மாநாட்டிற்கு வந்திருக்கிறோம் என்றும் கூறினார். தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ள 38 பிரதிநிதிகளில் அவரும் ஒருவர். நியூஸ்கிளிக் செய்தியாளர்கள், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் வந்துள்ள பிரதிநிதி களிடையே பேட்டி காண்கையில், பாஜக ஆளும் மாநிலங்களிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகள் அங்கே பாஜக-வினர் எப்படியெல்லாம் கல்வியில் மதவெறி நஞ்சைக் கலந்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், கல்வியை காவிமயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் விளக்கினார்கள்.
‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலை யில்லா இளைஞர்கள் அனைவருக்கும் வேலை அளிப்போம் என்று கூறி, ஆட்சியைக் கைப்பற்றி யவர்கள், இருக்கிற வேலைகளையும் ஒழித்துக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்’’ என்று திரிபுரா வில் வந்துள்ள பிரதிநிதி பாலாஷ் பௌமிக் கூறினார். மேலும் மாநிலத்தில் காவல்துறையும், பாஜக குண்டர்களும் எப்படியெல்லாம் அடக்குமுறையையும் ஒடுக்குமுறையையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளார்கள் என்பதையும் அவர் தெரிவித்தார். மாநாட்டை சிறப்பாக நடத்திக்கொண்டி ருக்கும் மேற்கு வங்க பிரதிநிதித் தோழர்களை யும், தொண்டர்களையும் பேட்டி கண்டபோது வேலையின்மையின் கொடுமைகளையும், பலர் தங்கள் தகுதிக்கேற்ற வேலை கிடைக்காமல் அற்ப ஊதியத்துடன் வாழ்ந்து வருவதையும் குறிப்பிட்டார்கள்.
இதேபோன்றே ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளும் தெரிவித்தார்கள். வேலை வேண்டும் என்று நாங்கள் போராடும்போது ஆட்சியாளர்கள் காவல்துறையைக் கொண்டு கண்மூடித்தனமாக அடித்து நொறுக்குவதை அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். உண்மை யில் காவல்துறையினர், போராடும் இளைஞர் அமைப்புகளை நசுக்குவதற்கே ஏவப்படு கிறார்கள் என்று அவர்கள் கூறினார்கள். இவை மாநாட்டின் அறிக்கையிலும் சுட்டிக்காட்டப் பட்டிருக்கிறது என்று அவர்கள் தெரிவித்தார்கள். முன்னதாக மாநாட்டில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அபாய் முகர்ஜி தன் வேலை அறிக்கையையும், அரசியல் ஸ்தாபன அறிக்கையையும் சமர்ப்பித் தார். அதன்மீது மாநிலங்களிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகள் விவாதங்கள் மேற்கொண்டனர்.
மாநாட்டை புகழ்பெற்ற இதழாளர் சசிகுமார் துவக்கி வைத்தார். அவர் தன்உரையின்போது சங்பரிவாரக் கூட்டத்தினர் எப்படியெல்லாம் ஜன நாயகத்தின் மீது தாக்குதலைத் தொடுத்திருக் கின்றனர் என்பதை விவரித்தார். ஜனநாயகத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்படும்போதெல்லாம், மதச்சார்பின்மையும் தாக்குதலுக்கு உள்ளா கிறது என்பதையும் விளக்கினார். நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத அவசரநிலை நடந்து கொண்டிருக்கிறது என்று கூறிய அவர், அர சமைப்புச்சட்டத்தின் 14, 19 மற்றும் 21ஆவது விதிகளும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின் றன என்றார். இந்தப் பிரிவுகளை நாம் பாது காக்கத் தவறினோமானால் பின் நாட்டின் அரச மைப்புச் சட்டத்தையே பாதுகாக்க முடியாது என்றார். மதத்தின் பெயரால் மதவெறி யும், எதேச்சதிகாரமும் நாட்டைச் சூழ்ந்துகொண்டி ருக்கிறது என்றும் அவர் கூறினார். பிரதிநிதிகள் மாநாட்டில் இடையிடையே அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே, இந்திய மாணவர் சங்க பொதுச் செயலாளர் மயூக் பிஸ்வாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கொல்கத்தாவிலிருந்து சந்தீப் சக்கரவர்த்தி,
தமிழில் தொகுப்பு: ச.வீரமணி